Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி: சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குழப்பம் - தமிழ்வின்

ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி: சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குழப்பம் - தமிழ்வின்

Source: Tamilwin

அவிசாவளை (Avisavala) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் ஹோட்டல் அறையில் 23 வயது யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 20 வயது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி அறையில் தன்னுடன் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் சிறுமி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக நேற்று (10) மாலை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா - கந்தப்பளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் பின்னர் இருவரும் நித்திரைக்கு சென்று சிறிது நேரம் கழித்து பார்த்த போது யுவதி தனது ஆடையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் நிலவியுள்ளதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.