Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் போதைப்பொருளுக்காக திருட்டில் ஈடுபட்டவர் கைது - ஐபிசி தமிழ்

யாழில் போதைப்பொருளுக்காக திருட்டில் ஈடுபட்டவர் கைது - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் 90,000 ரூபாய் பணத்தையும் ஐந்தரைப் பவுண் பெறுமதியான நகையையும் திருடிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருடியதாக குறித்த சந்தேக நபர் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்தநிலையில் நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்ட பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.