Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு! | Virakesari.lk

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு! | Virakesari.lk

Source: Virakesari.lk

மொனராகலை - செவனகலை சந்தி, கினிகல்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செவனகல சந்தியிலிருந்து கினிகல்பலஸ்ஸ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது மற்றும் 46 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இதேவேளை, அவிசாவளை - கொழும்பு வீதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.