Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு  மக்கள் கடும் எதிர்ப்பு

Source: www.pathivu.com

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி இன்றைய தினம் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.