Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

திருகோணமலையில் சிறந்த இரு மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கி வைப்பு - தமிழ்வின்

திருகோணமலையில் சிறந்த இரு மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கி வைப்பு - தமிழ்வின்

Source: Tamilwin

திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற இரு மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த காசோலையினை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இன்று (08.05.2024) பிரதேச செயலகத்தில் வழங்கி வைத்துள்ளார்.

இதில் திருகோணமலை சாரதா வித்தியாலய மாணவியான டி.சதுர்சிகா மற்றும் திருகோணமலை முள்ளிப்பொத்தானை கனிஷ்ட வித்தியாலய மாணவன் ஆர்.பி.தினேத் கவின் மெத்சர ஆகியவர்களுக்கே இந்த மேலதிக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை, ஓய்வூதிய திட்டம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.