Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மீண்டும் நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை... இன்னும் ஒரே நாள் தான்... இந்த வாட்டி மிஸ் ஆகாது!

மீண்டும் நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை... இன்னும் ஒரே நாள் தான்... இந்த வாட்டி மிஸ் ஆகாது!

Source: Samayam Tamil

தமிழகம் - இலங்கை இடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, கடல்வழி போக்குவரத்து சேவை இருந்தது. குறிப்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலம் மக்கள் பயணித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

நாகை டூ இலங்கை.. பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.!

கப்பல் போக்குவரத்து சேவைஇந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க இருநாட்டு அரசுகளும் ஆலோசனை நடத்தின. அதில் உடன்பாடு எட்டப்பட்டதும் கடந்த 2023 அக்டோபர் 14ஆம் தேதி முதல் சேவை தொடங்கியது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் கடல் சீற்றம் முக்கிய பிரச்சினையாக தலைதூக்கியது. இதன் காரணமாக அடுத்த 6 நாட்களில் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

வாழ்வில் முன்னேற மதிப்பெண்கள் மட்டும் போதாது.. உயர் நீதிமன்ற நீதிபதி அட்வைஸ்

நாகை - இலங்கையின் காங்கேசன் துறைமுகம்

இதையடுத்து நாகை - காங்கேசன் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். இது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பிராந்திய ரீதியிலான நல்லுறவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் எனக் கூறினர். இதையொட்டி எந்த நிறுவனம் கப்பல் போக்குவரத்து சேவைக்கு தயாராக இருக்கிறது என்பதை அறியும் வண்ணம் டெண்டர் விடப்பட்டது.

சிவகங்கை கப்பல் ரெடி

இதனை சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் நிறுவனம் கைப்பற்றியது. இந்த கப்பல் அந்தமானில் தயாரிக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த 10ஆம் தேதி புறப்பட்டு சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தது. இங்கு பதிவு, உரிமம், பயண அனுமதி உள்ளிட்ட பணிகள் கப்பல் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றன.

விஜய் அரசியல் கட்சியில் யார் யாருக்கு என்ன பதவி..? புஸ்ஸி ஆனந்த் தான் ஆல் இன் ஆல்

இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

பின்னர் நேற்றைய தினம் நாகப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தது. இன்று காலை 8 மணிக்கு தனது சோதனை ஓட்டத்தை சிவகங்கை கப்பல் தொடங்கியது. சரியாக 12 மணிக்கு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைகத்திற்கு வந்தடையும்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

மே 13 முதல் அதிகாரப்பூர்வ பயணம்

இது எந்த அளவிற்கு சரியாக வேலை செய்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். முழு பயணமும் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் நாளை (மே 13) முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கும். இதில் பொதுமக்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு நாகப்பட்டினம் டூ இலங்கையின் காங்கேசன் துறைமுகம் வரை பயணம் செய்யலாம்.