Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு - ஐபிசி தமிழ்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை (Mulliyawalai) பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று (12.05.2024) முதல் மே 18.05.2024 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் (Government of Sri Lanka) திட்டமிட்ட தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இதன் போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.

இதனை விடவும் இந்தக் கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும், எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.