Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு - தமிழ்வின்

அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு - தமிழ்வின்

Source: Tamilwin

அம்பாறை (Ampara) மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் ஒரு தொகுதியினருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கடந்த யுத்தகாலத்தில் அம்பாறை பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது.

இதன் காரணமாக, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 69 பேர் ஆசிரியர்களாக கடமையாற்ற பணிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாகாண சபையின் கீழ் ஆசிரியப் பணியில் கடமையாற்றிய குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தற்போது மத்திய அரசின் கல்வி அமைச்சின் ஊடாக நியமனம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.