Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

புத்தளத்தில் தனியார் வீட்டு தோட்டத்தினுள் புகுந்த இராட்சத முதலை - ஐபிசி தமிழ்

புத்தளத்தில் தனியார் வீட்டு தோட்டத்தினுள் புகுந்த இராட்சத முதலை - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

புத்தளம் (Puttalam) பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இராட்சத முதலையொன்று புத்தளம்- வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் இன்று (16) அதிகாலை தனியார் ஒருவரின் வீட்டு தோட்டத்தினுள் உட்புகுந்துள்ளது.

இதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று கடும் பிரயத்தணத்திற்கு மத்தியில் முதலையைப் பிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த முதலையை கல்வில சூழலியல் பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுவித்துள்ளனர்.

குறித்த முதலை சுமார் 7 அடி நீளமுடையது எனவும் சுமார் 100 கிலோ கிராம் எடைக் கொண்டு காணப்படுவதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.