Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

களுதாவளையில் இடம்பெற்ற கண்ணகை அம்மன் கரகம் - தமிழ்வின்

களுதாவளையில் இடம்பெற்ற கண்ணகை அம்மன் கரகம் - தமிழ்வின்

Source: Tamilwin

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் செட்டிபாயைம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு கண்ணகை அம்மன் கரகம் சதங்கையணி விழா இடம்பெற்றுள்ளது.

குறித்த விழாவானது, நேற்று வெள்ளிக்கிழமை (17.05.2024) களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, ஆலய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் சிறுமியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட கரகம், பாரம்பரிய முறையில் சிறுமியர்களுக்கு காற்சதங்கை அணிவிக்கப்பட்டு, ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது.