Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மதவாச்சி பிரதான வீதியை குறுக்கிட்ட யானை: பாதிக்கப்பட்ட போக்குவரத்து - தமிழ்வின்

மதவாச்சி பிரதான வீதியை குறுக்கிட்ட யானை: பாதிக்கப்பட்ட போக்குவரத்து - தமிழ்வின்

Source: Tamilwin

மன்னார் (Mannar) - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

முருங்கன் பண்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை, பண்ணையின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு மன்னார் - முருகன் பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின் வீதியை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.