Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மன்னார் - மதவாச்சியில் வீதிக்கு இறங்கிய காட்டு யானை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - ஐபிசி தமிழ்

மன்னார் - மதவாச்சியில் வீதிக்கு இறங்கிய காட்டு யானை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

மன்னார் (Mannar)- மதவாச்சி (Medawachchiya) பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இன்று (22) காலை முருங்கன் பன்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை, பண்ணையின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின்னர் வீதியைக் கடந்தது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த யானை காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த சில நாட்களாக மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இரவு பகல் பாராது காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.