Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் அரங்கேறிய பயங்கரம்: இளைஞன் மீது காவல்துறை உத்தியோகத்தர் வாள்வெட்டு - ஐபிசி தமிழ்

யாழில் அரங்கேறிய பயங்கரம்: இளைஞன் மீது காவல்துறை உத்தியோகத்தர் வாள்வெட்டு - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் யாழ்.தொல்புரம் மத்தியில் நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.