Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

இலங்கையில் கார்த்திகை மலரை அவமதித்த பிரபல காலணி நிறுவனம் - செய்திகளின் தொகுப்பு - தமிழ்வின்

இலங்கையில் கார்த்திகை மலரை அவமதித்த பிரபல காலணி நிறுவனம் - செய்திகளின் தொகுப்பு - தமிழ்வின்

Source: Tamilwin

கொழும்பு (Colombo) - வெள்ளவத்தையிலுள்ள காட்சியறை ஒன்றினுள் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகைப்பூவை அவமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு இந்த விடயங்களை எடுத்துச் சென்று உற்பத்தியில் இந்த சின்னத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே காட்சி அறையில் உள்ள குறித்த காலணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுக்கமாறும் தமிழர்கள் சார்பில் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,