Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப மரணம்! - ஐபிசி தமிழ்

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப மரணம்! - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

அவிசாவளை (Avissawella) - புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 78 வயதான , 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, தாய் மற்றும் தாத்தா ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கை, களு கங்கை, கிங் மற்றும் நில்வள கங்கைகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹாவில் (Gampaha) வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.