Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய நபர் - தமிழ்வின்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய நபர் - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் 70Kg கஞ்சாவுடன் சிக்கிய இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றைய தினம் (05.06.2024) வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று காலை சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது, படகில் இருந்தவர்கள் தப்பிச் செல்லும் வகையில் படகை செலுத்தியதையடுத்து கடற்படையினர் இடைவிடாது துரத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மணற்காடு கடற்பகுதியில் வைத்து 70Kg கஞ்சா போதைபொருளுடன் படகில் பயணித்த கட்டைக்காட்டை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டு நீண்ட விசாரணைகளின் பின்னர் மருதங்கேணி பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.