Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மட்டக்களப்பு - புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவம் | Virakesari.lk

மட்டக்களப்பு - புன்னைச்சோலை  பத்திரகாளியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவம்  | Virakesari.lk

Source: Virakesari.lk

மட்டக்களப்பு - புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் வெள்ளிக்கிழமை (07) ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய புன்னைச்சோலை தீ மிதிப்பு உற்சவத்தின்போது வெளிநாட்டவர்களும் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

கடந்த புதன்கிழமை (5) அம்பாளின் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வும் பவனியும் நடைபெற்றது.

தீ மிதிப்பு உற்சவத்தன்று பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று, அம்பாள் கடல்குளிப்பு நடத்தப்படும்.

தொடர்ந்து, அம்பாள் ஆலயத்துக்கு வருகைதந்தவுடன் தீக்குழிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகளும் அடியார்களும் சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீ மிதிப்பு நடைபெற்றது.