Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி ; ஒருவர் காயம் | Virakesari.lk

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர்  பலி ; ஒருவர் காயம்  | Virakesari.lk

Source: Virakesari.lk

யாழ்ப்பாணம் - பெதுருதுடுவ வீதியில் நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

பெதுருதுடுவையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரம் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், புத்தூர் பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவனொருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.