Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை - ஐபிசி தமிழ்

கொழும்பு ஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் : காவல்துறையினர் நடவடிக்கை - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

கொழும்பில் (Colombo) பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள் நுழைய முயன்ற இனந்தெரியாத இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டு தொகுதிக்குள் உட்பிரவேசிக்க முயன்றவர்கள் தொடர்பில் சந்தேகம் அடைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை எனினும் கேள்வி கேட்ட வீட்டுத்தொகுதியின் பாதுகாவலரை அவர்கள் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு (Samudita Samaravikrama) ஏற்கனவே ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பிரிவினால் ஆயுதங்கள் வழங்கப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இரண்டு இனந்தெரியாத நபர்கள் வந்துள்ளதாக கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் வீட்டின் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும், நேற்று முன்தினம் (20) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles), கல்கிஸ்ஸ பிரிவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன பிராமண (Prasanna Brahmana) மற்றும் பிலியந்தலை காவல்துறை பரிசோதகர் தினேஷ் அத்தரகம (Dinesh Atharagama) ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக சமுதித சமரவிக்ரம தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.