Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

இந்தியாவில் 400 கோடி ரூபா முதலீடு செய்துள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் பிரபலம் - ஐபிசி தமிழ்

இந்தியாவில் 400 கோடி ரூபா முதலீடு செய்துள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் பிரபலம் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

இலங்கை (Sri Lanka) அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் (Muttiah Murakitharan) இந்தியாவின் (India) கர்நாடக மாநிலத்தில் குளிர்பான நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் அவரது குடும்பத்தால் ஏற்கனவே குளிர்பான மற்றும் திண்பண்ட தயாரிப்பு நிறுவனமொன்று நடத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த நிறுவனத்தை இந்தியாவிலும் விஸ்தரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குளிர்பானம் மற்றும் இனிப்பு வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆயிரத்து 400 கோடி ரூபா முதலீடு செய்துள்ளார்.

இந்த தொழிற்சாலை தொடர்பில் கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் (உM. B. Patil ) டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதையடுத்து, தற்போது கர்நாடகாவில் தொழிற்சாலையை அமைக்க அவர் ஆயிரத்து 400 கோடி முதலீடு செய்துள்ளதுடன், இதற்காக 46 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.